அறத்துப்பால்
செய்ந்நன்றியறிதல்
Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக
துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவர் நட்பினை விடாதிருத்தல் வேண்டும். மனத்தில் குற்றமில்லாதவர்களின் உறவுபோன்ற நட்பினை மறவாதிருத்தல் வேண்டும்.
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore!.
Kindness of men of stainless soul remember evermoreForsake thou never friends who were thy stay in sorrow sore