158

அறத்துப்பால்

பொறையுடைமை

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்.

Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham

Thakudhiyaan Vendru Vital

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

பரிமேலழகர் உரை

மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.).

மணக்குடவர் உரை

தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மனதில் செருக்குக் கொண்டு தீமையானவற்றைச் செய்பவர்களைத் தாம் தம்முடைய பொறுமையினால் வென்றுவிடவேண்டும்.

🌏 English Translations & Explanations

Explanation

Let a man by patience overcome those who through pride commit excesses.

Translation

With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail.

English Couplet

With overweening pride when men with injuries assail,By thine own righteous dealing shalt thou mightily prevail