168

அறத்துப்பால்

அழுக்காறாமை

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth

Theeyuzhi Uyththu Vitum

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

பரிமேலழகர் உரை

அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி தன்னுடையானுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய நிலைக்குள் தள்ளிவிடுவான்.

🌏 English Translations & Explanations

Explanation

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).

Translation

Envy, embodied ill, incomparable bane, Good fortune slays, and soul consigns to fiery pain.

English Couplet

Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain