170

அறத்துப்பால்

அழுக்காறாமை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar

Perukkaththil Theerndhaarum Il

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

பரிமேலழகர் உரை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது).

மணக்குடவர் உரை

அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பொறாமையினைக் கொண்டு பெரியார்களாயினாரும் இல்லை. அத் தீச் செயல் இல்லாதார் பெருக்கத்திலிருந்து நீக்கப்பட்டவராகவும் இல்லை.

🌏 English Translations & Explanations

Explanation

Never have the envious become great; never have those who are free from envy been without greatness.

Translation

No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gain.

English Couplet

No envious men to large and full felicity attain;No men from envy free have failed a sure increase to gain