174

அறத்துப்பால்

வெஃகாமை

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

Ilamendru Veqkudhal Seyyaar Pulamvendra

Punmaiyil Kaatchi Yavar

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

சாலமன் பாப்பையா உரை

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.

பரிமேலழகர் உரை

இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்

மணக்குடவர் உரை

வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஐம்புலன்களையும் வென்று குற்றம் இல்லாத அறிவினையுடைய பெரியோர்கள் "யாம் வறுமை யுற்றோம்" என்று கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கமாட்டார்கள்.

🌏 English Translations & Explanations

Explanation

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute".

Translation

Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need.

English Couplet

Men who have conquered sense, with sight from sordid vision freed,Desire not other's goods, e'en in the hour of sorest need