210

அறத்துப்பால்

தீவினையச்சம்

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

Arungetan Enpadhu Arika Marungotith

Theevinai Seyyaan Enin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

சாலமன் பாப்பையா உரை

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

கலைஞர் மு.கருணாநிதி உரை

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

பரிமேலழகர் உரை

மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை

மணக்குடவர் உரை

ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச் செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பானானால் அவன் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

🌏 English Translations & Explanations

Explanation

Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

Translation

The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide.

English Couplet

The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide