229

அறத்துப்பால்

ஈகை

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.

Iraththalin Innaadhu Mandra Nirappiya

Thaame Thamiyar Unal

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

பரிமேலழகர் உரை

நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது

மணக்குடவர் உரை

இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நிறையச் சேர்த்து வைத்துத் தாமே உண்டு மகிழ்கின்ற செயல், பிறரிடத்தில் சென்று யாசிப்பதனைவிடத் துன்பம் தருவதாகும்.

🌏 English Translations & Explanations

Explanation

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

Translation

They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily bread!.

English Couplet

They keep their garners full, for self alone the board they spread;-'Tis greater pain, be sure, than begging daily bread