298

அறத்துப்பால்

வாய்மை

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai

Vaaimaiyaal Kaanap Patum

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

பரிமேலழகர் உரை

புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்

மணக்குடவர் உரை

உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவனுக்கு உடம்பு தூய்மையாவது நீராலேயே அமையும். மனம் தூய்மையாக இருப்பதென்பது வாய்மையால் உண்டாகிக் காணப்படும்.

🌏 English Translations & Explanations

Explanation

Purity of body is produced by water and purity of mind by truthfulness.

Translation

Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow.

English Couplet

Outward purity the water will bestow;Inward purity from truth alone will flow