318

அறத்துப்பால்

இன்னா செய்யாமை

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.

Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo

Mannuyirkku Innaa Seyal

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.

பரிமேலழகர் உரை

தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்

மணக்குடவர் உரை

தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பிறர் செய்யும் துன்பம் தன உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிந்தவன், நிலைபேறுடைய பிற உயிர்க்குத் துன்பம் செய்வது என்ன காரணத்தால்?.

🌏 English Translations & Explanations

Explanation

Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?.

Translation

Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man?.

English Couplet

Whose soul has felt the bitter smart of wrong, how canHe wrongs inflict on ever-living soul of man