82

அறத்துப்பால்

விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa

Marundheninum Ventarpaar Randru

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

சாலமன் பாப்பையா உரை

விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

பரிமேலழகர் உரை

சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து

மணக்குடவர் உரை

விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

வந்த விருந்தினரை இல்லத்தின் புறத்தே இருக்கவைத்துச் சாவியினைத் தராத மருந்தாக இருந்தாலும், தான் மட்டும் சாப்பிடுதல் முறைமையுடையதாகாது.

🌏 English Translations & Explanations

Explanation

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

Translation

Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred.

English Couplet

Though food of immortality should crown the board,Feasting alone, the guests without unfed, is thing abhorred