164

அறத்துப்பால்

அழுக்காறாமை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin

Edham Patupaakku Arindhu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.

பரிமேலழகர் உரை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன

மணக்குடவர் உரை

அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பொறாமையினால் தமக்குத் துன்பம் வருவதை அறிந்தவர்கள், பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.

🌏 English Translations & Explanations

Explanation

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

Translation

The wise through envy break not virtue's laws, Knowing ill-deeds of foul disgrace the cause.

English Couplet

The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause