165

அறத்துப்பால்

அழுக்காறாமை

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.

Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar

Vazhukka�yum Keteen Padhu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

பரிமேலழகர் உரை

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை

அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அழுக்காறு (பொறாமை) உடையவர்களுக்குப் பகைவர்கள் தீமை செய்ய வேண்டுவதில்லை. ஏனெனில், அப்பொறாமைக் குணமே அவர்களை அழிப்பதற்குப் போதுமானதாகும்.

🌏 English Translations & Explanations

Explanation

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

Translation

Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate..

English Couplet

Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate